Thursday, February 27, 2014

”பண்பிலது பார்...!”

செறிவடர் செங்கீற்று சுடரொளி
சிதறிய புறவெளி சிந்திய பொன்னொளி
பதறிய ஆழியின் ஆர்த்தெழு அலையொலி
ஒளியருவி ஊடறுத்த கண்ணொளி

கவினுரு புலநுகர்வு புத்தியில் அழுந்திய
கழிமுக வண்டல் வளமென் கவிதை
சுழிமுகத் தென்றல் சுகமென தழுவல்
சுழுமுனை அடிபொதிந்த கருப்புதையல்

எழுவன எண்ணங் கள்ளென என்னுள்
ஏழ்கடல் கொதிப்பு ஆழ்மடல் விரிப்பு
தாழ்மடல் திறப்பு பாழுடல் தகிப்பு
ஆழ்மனச் சிரிப்பில் அடங்குதல்

வாள்முனை விழியில் கூர்முனை காட்டிய
வன்மம் துணிந்த உள்மனக் குவியல்
ஆற்றல் பொழிதல் அனுபவ குளியல்
வீரிய விதைகளின் முளைப்பில்

கண்டும் விண்டும் கவிதையில் முகர்ந்தும்
பண்டும் தொண்டும் புவியினில் விழைந்தும்
பண்பும் அன்பும் பரணில் ஏறிய
கண்டம் கண்டதும் தகுமோ...?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஆழ்மனச் சிரிப்பில் அடங்குதல்...///

அருமை... வாழ்த்துக்கள்...