Thursday, February 20, 2014

”நிலா முள்...!”

கருதிய கருத்தும் மனதில் இடைச்செருகிய
எண்ணம் உள்ளெழு சிந்தனை வாய்மொழிந்த
சொல்லும் கல்லென விழும் கவிதையோ..?
புல்லென எறிந்த பூவோ..?! - அறியேன்

நில்லென நிற்றலும் செல்லென ஏவலும்
வாவென்ற ழைத்தலும் வாடிக்கை தானுனக்கு
வெதும்பும் மனதில் வேடிக்கை தானெனக்கு
ததும்பும் விழிகள் கதம்பம் கோர்க்கும்

கண்ணீர் மாலைகள் கழுத்தில் விழுந்தும்
கனத்த மார்பில் நனைத்து பரவும்
அடர்ந்த நினைவுகள் அழிக்கும் முயற்சியோ..?
அறியேன் - சூதென்ற உன் வாதமும்

சுள்ளென்ற சொல்லும் கொல்லென்று சொல்லும்
கருகிய கட்டையில் உருகிடும் நெய்யது
உதவாது உயிர்க்கு - பேதமிலா பெருந்தீ
நின்றெறி தலைமுதல் கால்வரை கோபத்தீ

சென்றெறி உந்தன் உளவழுக்கும் வழக்கும்
கண்டறி காணுதல் மெய்யதும் மெய்யற்ற
மேன்மை தன்னில் போய்நின்ற பொய்யழகே...!
கையற்ற வாழ்வினுக்கே கடைக்கண்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

புரிதல் நன்று...!

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை நண்பா... வாழ்த்துக்கள்.