Thursday, February 27, 2014

”வாழ்தல்...!”

இங்கே பிறந்தோம் இங்கே வாழ்ந்தோம்
இன்பம் துன்பம் இரட்டைகள் யாவும்
இங்கே கடந்தோம் காலம் தோறும்
இங்கே தவமாய் கிடந்தோம்

துடிப்பும் நடிப்பும் அறிவும் ஆற்றலும்
திரிதலும் நிலைத்தலும் தேடலும் நாடலும்
தேவைகள் மாறியும் ஓடிய காலங்கள்
தேன்கூட்டு சேமிப்பாய் தேகத்தில்

வான்கூட்டு வகைதனில் வந்ததிந்த பிடிமானம்
வான்கூட வகையாய் பிரிந்ததே பரிணாமம்
நாட்கூட நாட்கூட பிரிவினில் உறவுகள்
பிறந்து பிறந்து செரித்தது

வலிந்து கட்டி வரிந்து கட்டி
வலிமை கூட்டி புலமை காட்டி
இனிமை தேடி இருத்தல் தேடி
இங்கே கிடந்தோம் - மிகுதியின்

மிச்சமாய் பாலினப் பகுப்பில் படைப்பென
நிகழ்த்திய பருப்பொருள் கடத்தல் வெளிவர
விழுமிய உடற்பொருள் நுணுப்புகள் திமிரிய
வெதும்பலில் விழுந்து கிடந்தோம்

தன்னால் ஆவது தானொன்று மில்லை
தன்மையுள் தன்னை அறியாத தொல்லை
திண்மையாய் உரைத்தும் பன்மையாய் கேள்வி
கேட்பது நாம்செய்யும் வேள்வியாய்


பிறையின் பிறழ்தல் பிழையென பிறழ்தல்
பிறையது சுழலச் சுழலும் முழுமை
குன்றல் குன்றென நிற்றல் யாவும்
இயக்க நிலை மாற்றம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// தன்மையுள் தன்னை அறியாத தொல்லை ///

சிறப்பு வரிகள்... உண்மை வரிகள்...

'பரிவை' சே.குமார் said...

கவிஞருக்கு ஜெ....

காயத்ரி வைத்தியநாதன் said...

//தன்னால் ஆவது தானொன்று மில்லை
தன்மையுள் தன்னை அறியாத தொல்லை
திண்மையாய் உரைத்தும் பன்மையாய் கேள்வி
கேட்பது நாம்செய்யும் வேள்வியாய்// அருமையான பகிர்வு..