Wednesday, February 26, 2014

”தாய்...!”

இசையருவி கொட்டும் மலையருவி திட்டும்
தாளகதி மாற்றி மாற்றி தகதிமித்தோம்
தழுவலும் துள்ளலும் பாவம் மாற்றி
தன்னடை மாற்றி பண்நடை மாற்றும்

காட்டாறு கரையோரம் இன்பத்தை கொட்டும்
சின்னஞ்சிறு புள்ளினம் உற்சாக துருதுருப்பில்
எண்ணமுறு மனமோ இன்பக் குறுகுறுப்பில்
வண்ணம் பலகாட்டி வாரியிரைக்கும் நீரலையில்

கவின்மிகு கவிதைகள் கொட்டி இறைத்து
கரைபுரண்டு அலைதிரண்டு கட்டி அணைத்து
கவிபாடி புவியோடி வாழ்வின் வேர்கள்
கணந்தோறும் உயிர்பித்த கருணை வடிவம்

மண்ணில் பொன்னை வாரி இறைக்கும்
தண்ணீர் பந்தல் இராகம் அமைக்கும்
உயிரின் இசையாய் மையல் கொள்ளும்
இயற்கை நதியாம் எங்கள் தாய்.

2 comments:

காயத்ரி வைத்தியநாதன் said...

அழகிய வரிகள்..:)

திண்டுக்கல் தனபாலன் said...

கவின்மிகு வரிகள் கொட்டுகிறது...

வாழ்த்துக்கள்...