Monday, February 24, 2014

"கற்பி...!”


சிறுசிறு தூறலில் சிதறிய மணலில்
சிதறிக் கிடக்கிற சிந்தனைத் துளிகள்
உதறி எழுந்த உதறலில் தெறித்த
சிறுசிறு மண்துகள் மனதின் நினைவுகள்

ஊணுறை உயிர்வரி வரைந்திட துடிக்கும்
உளிகளாய் விழுந்திடும் துளிகளின் வீச்சும்
செதுக்கவே சிதைத்திடும் சிறுகல் தெறிப்பும்
உள்வெளி திருத்தம் உள்ளொளி பெருக்கம்

கண்ணுறா பொலிவு மனமது கண்டு
கல்லுற்ற கடினத்தில் சொல்லற்ற வடிவத்தை
தன்னுற்ற கரத்தாலே தன்சிந்தை திறத்தாலே
எண்ணற்ற எழிலார்ந்த சிற்பங்கள் முடித்தானே.

No comments: