Friday, January 17, 2014

”குயிலும் கவியும்...!”



அந்த வனத்துக் குயில் மௌனிக்கிறது
கிளைகளில் நம்பிக்கை இல்லா தீர்மானமோ..?!
அமர்ந்து அமர்ந்து எழுந்த அலுப்போ..?
அங்கும் இங்கும் திரிந்த சலிப்போ...?!

கவிஞன் திசை நோக்கி தியானிக்கிறான்
இசையின் பிறப்பிடமே ஏனிந்த தயக்கம்..?
அசையும் உன்னசை விலன்றோ எனக்கான
அரங்கேற்ற ஒத்திகை நிகழ்ந்து விட்டது

விழிகளின் வீச்சில் காட்டும் அச்சம்
மொழிகளை ஊமையாய் மாற்றிப் போட்டதோ
கழுத்து அசைவில் சுழலும் உலகம்
நின்றதோ எனக்கு..? முன்னும் பின்னும்

தேடலில் விரியும் தேகத்துள் மனம்
கூடலில் சொரியும் மேகத்து துகளாய்
மிதக்க மிதக்க கனத்து பொழிகிறது
இணக்கம் சுணக்கம் இருத்தல் பிரிதல்

கலைந்து கலத்தல் கவிதையாம் வாழ்வில்
அலைந்து வளைந்து நெலிந்து மெலிந்து
சலைத்த மனம் ஆட்டம் நிறுத்தி
இலயித்து கிடக்கும் ஆடலரசன் அழகில்

ஓங்கி ஒலிக்கும் உயிர்க்குரல் சிலிர்ப்பில்
வாங்கி எழுதும் கவிதை குயிலின்
ஏக்கம் தெறிக்கும் முகிலின் தென்றல்
தாங்கி சிரிக்கிறது கவிஞனின் மனம்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...


கலைந்து கலத்தல் கவிதையாம் வாழ்வில்
அலைந்து வளைந்து நெலிந்து மெலிந்து
சலைத்த மனம் ஆட்டம் நிறுத்தி
இலயித்து கிடக்கும் ஆடலரசன் அழகில்........


அருமையான கவிதை நண்பா...