உணவில் உருவான ஊணின் நிலை
உருமாற்ற ஒருகட்டு விறகின் தீயில்
உருக்குலைய கறுகும் குறுகும் நெய்யென
உருகும் ஊண் தன் உரமழிந்து
பருகலும் பாசத்தில் உருகலும் பின்
புலம்பலும் பின் புலம்பி வருந்தலும்
புரியத் தொடங்கும் காலம் முடிய
புவனம் பொருள் விளங்கா உருண்டையாய்
பிறவிக்கும் பிறப்புக்கும் தடம் பதிந்த
பின்புலம் பற்றத் தொடரும் வாழ்க்கை
பின்வரும் வினைகள் கொட்டும் முரசில்
பிரளயம் உணராது ஆடும் சிரசில்
தவமொன்று தவமிருக்கும் அழகொன்று கண்டேன்
தனித்த தொருதவம் முகிழ்த்த நிலை
தவிக்கும் மனம் அடங்கும் உலை
தன்னை தான் பார்க்க குலை
நடுங்கும் நடுக்கம் தீர வரும்
ஒடுக்கம் ஒடுங்க வரும் இடுக்கண்
ஒடுங்கும் உயிர்ப் பிதுங்கும் உடல்
வதங்கும் நிலை மாறச் சுடரும்
சுடரில் சுடும் கதிர் வெளிப்படும்
சுகமென சுகம் சுகமற்ற சுகம்
அகம் தொடும் அகத்தே உதிக்கும்
அருட் சுடரில் ஆதியும் அந்தமும்.
4 comments:
அருமை..
தவமொன்று தவமிருக்கும் அழகொன்று கண்டேன்
தனித்த தொருதவம் முகிழ்த்த நிலை
தவிக்கும் மனம் அடங்கும் உலை
தன்னை தான் பார்க்க குலை
மிகநன்று..
நல்லாயிருக்குங்க... நல்லாயிருக்கு...
கவிதை மிக அருமை ...நண்பரே...
Post a Comment