Friday, October 01, 2010

"பொதுவில்....!!"


மதுவையும் ...
மாதுவையும் சுவைக்காதவன்
மனிதன் இல்லை...! அப்படி
சுவைத்தவன்.....
மனிதனாய் இல்லை..!!

மதுவையும், மாதுவையும்
பொதுவில் வைத்தான்.
இரண்டிலும் வெல்ல
"சூது செய்தான்".

இரண்டையும் சம பங்காக்கிய போது
"கலகம்" பிறந்தது.
யாருக்கு சொந்தம் ? என்கிற
"உரிமைப்" பிறந்தது.
"உரிமைப் போர்" பின்விளைவாய்
"நியாயம்" பிறந்தது.
சொந்தம் கொண்டாட "உறவுப்"
பிறந்தது. உறவுகளால்
"குடும்பம்" பிறந்தது.

இன்னும் தொடங்கிய இடத்திலே
தொடர்கிறது......
"சொந்தம் கொண்டாடும் உரிமைப் போர்."
நிலையாமை சொல்லியும்.....,
நிலையறியா நிர்மூடம் வாங்கும்
"உயிர்பலி....!!".

1 comment:

வினோ said...

கவிதை அருமை நண்பா..

நேரம் கிடைப்பின் gmail வரவும்