Monday, August 23, 2010

காத்திருந்த காதல் ...!


கண்ணில் குளவி கொட்டும் போதே
காலில் தேள் கொட்டியவனாய் நான்...
இதுவே பொறுக்க முடியவில்லை என்கிறேன் நான்.
இன்னும் இருக்கிறது என்கிறாய் நீ.
என் உடம்புக்குள்...
அங்குலம்...அங்குலமாய்...
நச்சு நகரும் நரக வேதனையை
அனுபவிக்கிறேன் நான்.
கொட்டிய தேளின்
கொடுக்கின் முனை அளவு கேட்கிறாய் நீ.
"இடுக்கன் கலைவது" .....யோசிக்கிறேன்.
என் யோசிப்பு புரிந்தவளாய் ...
"நான் காதலி" என்கிறாய்.
கடுக்கும் வலியிலும் உன் காதல் ....
இனிக்கிறது கண்மனி.
பொருத்துக் கொள்ள முயல்கிறேன்...உன்
புன்முறுவல் காட்டு.
இருக்கிறாயா?? இதோ வருகிறேன் என்கிறாய்,
இறப்பவனை பார்த்து.
இருக்கிறேன்....சீவன் இருக்கும் வரை..என்கிறேன் நான்.
கண்ணில் கொட்டிய குளவியோடு....நீயும்
காணாமல் போனாய்.
விழிமூடும் முன்னே வருவாய் என எதிர்ப்பார்த்தேன்.
உனக்கு முன்னே முந்திக்கொண்டது குளவி விடம்.
திறக்க முடியாத அளவு வீங்கி விழிமூடிக் கொண்டது.
சும்மா இருக்குமா தேளின் விடம்...?!
நீ வந்து சேரும் முன்னே...
விதி வந்து சேர்ந்தது.

No comments: