Thursday, June 17, 2010

"இந்திய தேசமே" -2

அப்படி சரிந்ததுதான் "சோவியத் யூனியன்".
இசுலாமிய நாடுகளில் ஆயுதம் விற்று...
அதற்கு பிணையாக அவன் கேட்கும் விலைக்கு...
இசுலாமியர்களிடமிருந்து எரிப்பொருளை பிடுங்கிக் கொள்ளும்
"குள்ளநரித்தனமெல்லாம்" நமக்கு வருமாய்யா???!.
அங்கே ஒரு பக்கம் இது நீண்ட காலமா நடக்குது.
இஸ்ரெல்...பாலஸ்தீனம் இது ஒரு பக்கம்.
இலங்கை ...விடுதலைப் புலிகள்..இது ஒரு பக்கம்.
பத்தும் பத்தாததுக்கு....
பாகிஸ்தான்...இந்தியா....
பாகிஸ்தான்... ஆப்கானிஸ்தான்....
இப்படி அந்த சதிகார சண்டாளனின்
பட்டியல் நீள்கிறது.
இதுவரை....
"நம்முடைய கையே நமக்கு உதவி" என்றிருந்த இந்தியாவை...
"அமெரிக்காவின் கையும் வேண்டும்" என்ற
மாயத் தோற்றத்தை...நம்ம..
ம(ண்)ன்மோகன் சிங்க் மூலமா...
உருவாக்கி விட்டு இருக்கான் இந்த அமெரிக்கா.
எதற்காக நாம் அவனோடு உறவாட வேண்டும்???
என்ன இலாபம் நமக்கு???
யோசிக்க வேண்டும் இந்தியா...? யோசிக்க வேண்டும்.
(ம்கூம்..ம்கூம்...அத செஞ்சிருந்தா நான் எப்பவோ உருப்பட்டு இருப்பேன்
என்கிற முனகல் காதில் விழுகிறது.)
இப்போதைக்கு உலகின் வளர்ந்த நாடுகளின்
"குப்பைத் தொட்டி" இந்தியாதான்.
எதை எதையெல்லாம் அவர்களால் வைத்துக் கொள்ள முடியாதோ...
அதை கொட்டி வைக்கும் இடம் இந்தியா.
இதற்கு இந்தியா வைத்துக் கொண்ட பெயர் " உலக மயமாதல்".
என்ன ஒரு அழகான முகமூடி பாருங்கள்.
மிக குறைந்த கூலிக்கு அதிக நேரம் உழைக்கும்
ஏமாளித் தொழிளாலன் இந்தியாவைத் தவிர
வேறு எங்கேனும் கிடைப்பானா???
அது மட்டுமா?
வளர்ந்த நாடுகளில் உழைப்பாளியின் ஒவ்வொரு
வியர்வைத்துளிக்குப் பின்னாலும்
அந்த நாட்டின் சட்டம் இருக்கிறது.
சட்டச் சலுகை இருக்கிறது.
மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது.
எனவே சட்டத்தை மதித்தாக வேண்டிய கட்டாயம் வருகிறது.
இந்தியாவில்தான் சட்டத்தை விலைக்கு வாங்கும் சட்டம் அமளில் இருக்கிறது.
கூலித் தொழிளாலரின் குரல்...எங்கேனும் வெளிப்பட்டால்
அதன் குரல்வளை நெறிக்கும் தொழிற்ச்சங்க கூலிப்படைகள் இருக்கின்றன.
சூட்கேசுகளுக்கு சோரம் போகும் மரமண்டைகள் இருக்கின்றன.
இந்த அணு ஆயுத ஒப்பந்தம் இருக்கே...
அது குரங்கு கை கொள்ளிக் கட்டைத்தான்.
ஐயா மண்மோகன் சிங்கு,...கொஞ்சம் கவனிப்பா...
உன் தலைல வைக்கிறதானாலும்...
வால்ல வைக்கிறதானாலும்...
வெந்து ...நொந்து போ>>>போறது...
என்னமோ என் தேசம்தான்றத மறக்காதீக.
இந்த தேசத்து அணுவிஞ்ஞானிகள் அத்தனை பேரும்...
தடுத்தும்....நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படாது...
என சொல்லியும், படாது...படாது...
எனக்கு அமெரிக்காதான் முக்கியம்
அப்படின்னா.....??
இதுக்கு என்ன அர்த்தம் ......?!
அவ்வளவு பெரிய அறிவாளியா...நீர்!!
அவ்வளவு பெரிய முட்டாள்களா நம்ம விஞ்ஞானிகள்.!
என்ன நிர்பந்தம் வந்தது? நிபந்தனைகளோடு யூரேனியம்
வாங்கத் தான் இந்த ஏற்பாடா?? இல்லை...
சூட்கேசு சூட்சுமம் இருக்கா தலைவரே...!!!
விற்பவன் விற்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே.
அப்புறம் என்ன வேவுப் பார்க்க அனுமதி.??
அங்கனத்தான்....வாத்தியாரே....
அமெரிக்கா காரன் வைக்கிறான் நமக்கு "ஆப்பு"..!
எப்புடின்றீயா??....
(இங்க மட்டும் நல்லா.. வக்கனையா கேளு, கேக்க வேண்டிய ஆளுகள வுட்டுடு)
இப்போ ஈரான், ஈராக்ல என்ன நடந்துச்சு.??
அமெரிக்கா காரன் கெலப்புன புளுகு மூட்டைய
நம்பிக்கினு உலக நாடுக...
வாயை..? (அதையும்தான்)... மூடிட்டு நின்னாங்களா?
இவந்தான் பெரிய "போலிஸ்காரனாச்சா"...
உன் நாட்ட நான் சோதனைப் போடனும்னு
வச்சான்யா ஒரு ஆப்பு.
சதாம் உசேன்னுக்கு குறி வச்சி
"உள்ள இறங்குனானுக"....சரி,
அவன் புளுகுன மாதிரி ஏதாவது ஒரு தடயம் கிடைச்சிதா?
இல்லையே. ஆனா...அந்த நாடு என்ன ஆச்சு???
சதாம் என்ன ஆனாரு???
புரியலையா???
(மரமண்டை) அதே நிலமைதான் நாளைக்கு ...
நமக்கும்.
முதல்ல சோதனைன்னு உள்ள வருவான்.
எனக்கு அங்க சந்தேகம், இங்க சந்தேகம்..னு சொல்லி
மொத்த நாட்டயும் சல்லடைப் போட்டு சலிச்சுப் புட்டு
உன்னொட கோவணம் அவன் கண்ண உறுத்த....
உறுவுவாம்ப் பாரு.......
அப்பதாண்டா நீ கதறுவ...?! ( எனக்கு சந்தேகமா இருக்கு).
அப்புறம் என்ன?
அமெரிக்காவுக்கு இந்தியா அடிமைன்னு...
இந்தாளு அறிக்கை வுடுவாரு.
இல்லாட்டி.....
எவன் அறிக்கை வுடுறன்றானோ...!
அவந்தான் நமக்கு "பிரதமர்" ஓய்.
எப்படி நம்ம அமெரிக்கா?
வாய்ல வெரல வச்சு சூப்பு ராசா...!!!
நம்மால முடிஞ்சது அவ்வளவுதான.
சோரம் போறதே நமக்கு பொழப்பா போச்சு.
உன் பொண்டாட்டி கைய அவன் புடிச்சிக்கிட்டு...
"இந்தியர்கள் சுதந்திர காற்றை இப்போதான் சுவாசிக்கிறார்கள்"
அப்படின்னு...
அறிக்கை விட்டுகிட்டே
ரவிக்கை அவிழ்க்கப் போறான்...
பார்த்துக்கோ
.

No comments: