Friday, October 02, 2009

"கனவல்ல நிசம்..!"



கனவல்ல நிசம் …
கனவல்ல நிசம் …
என் காதல் …!

விழிமூடும் வேளை வந்து
விடியலில் கலைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் …!

கதிரொளி பட்டு
கலைந்து போகும்
பனித்துளியாய்
கலைந்து போக
கனவல்ல நிசம் ...
என் காதல் …!

தொலைதூர பார்வைக்கு
தோன்றி மறையும் ...
கானல் நீர் போல்
மறைந்து போக
கனவல்ல நிசம் ...
என் காதல் ..!

பற்றிக்கொண்ட நெருப்போடு
பறந்து போகும்
கற்பூரம் போல்
கரைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் ..!

வானில் வர்ணம் காட்டி வளைந்து
வானவில்லாய் தொலைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் …!

பாய்பொருள் மேல் மிதக்கும்
பருப்பொருள் எடை குறையுமாம் …!
கண்ணீரில் மிதக்கும் என்
இதயம் கனக்கிறதே …!
கனவல்ல நிசம் …
என் காதல் ...!!!

No comments: