Tuesday, September 08, 2009

மலர்..!


மலரில் நீயும்
மனத்தால் நானும் அழகு .!
உன்னைவிட
என் மனம் அழகு ..!
பெண்ணைவிட
நீ அழகு ..!
தாய்ச் செடியில் இருந்து உன்னையும்
தாய் மடியிலிருந்து ஒரு ஆணையும்
சுலபமாய் பறித்து விடுகிறாள் ...!
சுயநலமாய் பிரித்து விடுகிறாள் ..!!
பெண்ணை விட நீ மென்மை…
உன்னை விட என் மனம் மென்மை…
உன்னை பறிப்பது போலவே ,
என் மனதையும்
எளிதாய் பறித்து போனாள் .

அழகாய் இருக்கும்வரை
சூடி அழகு பார்த்து …
உன்னை நசுக்கி வீசுவது போலவே …
என் மனதையும் ….!!!?


நறுக்கும்போதும் சரி
நசுக்கும்போதும் சரி
அவள் யோசிப்பதே இல்லை .
உனக்கும் …. எனக்கும்
வலிக்கும் என்று …!

முள்வேலி கொண்ட உன்னை
முன்பின் யோசிக்காமல் பறித்தாள் .
வேலி இல்லாத என் மனதை
வெவ்வேறாய் பிரித்தாள்.


மணம் கொண்ட உன் இதழில்
காலம் தந்த பரிசு …
பனிநீர்த் துளி ..!
மனம் கொண்ட என் இதழில்
காதல் தந்த பரிசு
கண்ணீர்த்துளி …!!!

No comments: