Sunday, September 13, 2009

"திகைப்பு..!"


கண்மணி உனைக்
காணும் போதெல்லாம்
எனக்குள் ஏற்படும் மாற்றம்
பௌதீக மாற்றமா ?
வேதியியல் மாற்றமா ?
இரசவாத வித்தையா ?
நான் நானாக இருப்பதால்
பௌதீக மாற்றம் ..!
நான் நீயாக மாறுவதால்
வேதியியல் மாற்றம் ..!
நான் இங்கேயே இருந்தும்
எங்கேயோ பறப்பதால்
இரசவாத வித்தை என …
எனக்குள் மாற்றங்கள் நிகழ்த்தி
இயற்கையின் முப்பரிமாணம்
காட்டும் நீ யார் ?!!.

No comments: