Tuesday, August 18, 2009

விதி பழித்தல் !


விதி.,
எத்தனை முறை
என்னை வீழ்த்தினாலும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோவதற்கு
மரமல்ல நான்...!
விதை! -
நான் விதை..!
வேரூன்றி வெடித்தெழுவேன்...!
வினை கிழித்து முளைத்தெழுவேன்..!
விதியையே கொம்பாக்கி அதை சுற்றிப் படர்வேன்..!
என் விளைவுகளால் விதியை மூடுவேன்..!
என் எண்ணங்களையே
வண்ண மலர்களாக்கி ,
வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!
நான் தரும் நிழலில்
விதியே வந்து இளைப்பாறு
என்பேன்.

No comments: